×

திருத்துறைப்பூண்டியில் சாய்ந்து கிடக்கும் போக்குவரத்து போலீஸ் நிழற்குடை சீரமைக்காமல் மெத்தனம்

திருத்துறைப்பூண்டி, மார்ச் 20: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியநகரபகுதிகளில் கஜா புயலில் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரி கட்டிடங்கள், வர்த்தக நிறுவனங்கள், மின்கம்பங்கள், கோயில்கள் போன்றவை சேதமடைந்தது. படிப்படியாகஒவ்வொன்றும் சீரமைக்கும் பணிநடைபெற்று வருகிறது. ஆனால் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் இருந்த போக்குவரத்து போலீஸ்நிழற்குடை கஜா புயலிலின்போது சாய்ந்து 4 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் சீரமைக்கப்படவில்லை. தற்போது கோடைகாலம் என்பதால் போக்குவரத்து போலீசார் பணியாற்றுவது சிரமம்.எனவே கஜா புயலில் சாய்ந்த போக்குவரத்து போலீஸ்நிழற்குடையை சீரமைக்க வேண்டுமென்று சமூகஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில்...