×

தேர்தல் விதிமுறைகள் அமல் புதிய குடும்ப அட்டைகள், ஆதார் தொடர்பான திருத்தங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை

வலங்கைமான், மார்ச் 20: தற்போது  தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால்  புதிய குடும்பஅட்டைகள் மற்றும் ஆதார் தொடர்பான திருத்தங்கள் மேற்கொள்ள தேர்தல் ஆணயம் தடைவித்தித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் விதிமுறை உடனடியாக  நடைமுறைக்கு வந்துள்ளது. இந்நிலையில் நாகை நாடாளுமன்றத்திற்கும் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கும்  உட்பட்ட வலங்கைமான் பகுதியில் வருவாய்த்துறை அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:  வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலர் மூலம் புதிய குடும்ப அட்டைகள் மற்றும் குடும்ப அட்டை தொடர்பான பெயர் சேர்த்தல், நீக்கல்  தொடர்பான பணிகள் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது. அதேபோன்று ஆதார் அட்டையில் ஆதார் எண் மற்றும் கைபேசி எண் ஆகியவை மாற்றம் செய்யவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே ஆதார் மற்றும் குடும்ப அட்டைகள் தொடர்பான பணிகள் மேற்கொள்வதற்கு தேர்தல் வரை வரவேண்டாம் என   வருவாய்த்துறை தெரிவித்துள்ளது

Tags : Election Commission ,Adhar ,
× RELATED வாக்குச்சாவடி மையத்தின் அருகில்...