அதிராம்பட்டினம், மார்ச் 20: அதிராம்பட்டினத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. அவைத்தலைவர் சாகுல் ஹமீது தலைமை வகித்தார். நகர இணை செயலாளர் தில்லைநாதன் வரவேற்றார். கலை இலக்கிய பேரவை அமைப்பாளர் பழஞ்சூர் செல்வம், நகர பொருளாளர் கோடிமுதலி, முன்னாள் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சபீர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் இராமகுணசேகரன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.