ஜவுளிக்கடை கதவை உடைத்து ரூ.7.45 லட்சம் கொள்ளை

பட்டுக்கோட்டை, மார்ச் 20: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பெரியதெருவில் ஒரு ஜவுளிக்கடை உள்ளது. கடந்த 17ம் தேதி இரவு கடையை மூடி விட்டு உரிமையாளர் மாரிமுத்து வீட்டுக்கு சென்றார். இதையடுத்து 18ம் தேதி காலை கடையை திறப்பதற்கு மாரிமுத்து சென்றார். அப்போது கடையின் பக்கவாட்டு இரும்பு கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கடைக்குள் சென்று பார்த்தபோது மேலும் மேஜையின் டிராயர் உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூபாய் 7 லட்சத்து 45 ஆயிரம் திருடப்பட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து பட்டுக்கோட்டை நகர போலீசாருக்கு மாரிமுத்து தகவல் கொடுத்தார். புகாரின்பேரில் பட்டுக்கோட்டை நகர போலீசார் நேற்று வழக்குப்பதிந்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: