1950 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தேர்தல் சந்தேகங்களை தீர்க்கலாம்

தஞ்சை, மார்ச் 20: தஞ்சை  கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் தொடர்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் தேர்தல் தொடர்பான அனைத்து தகவல்களையும் பெற முடியும்.  வாக்காளர்கள் தங்களது வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா, எந்த பாகத்தில்  உள்ளது, தேர்தல் வாக்குப்பதிவு நேரம் எவ்வளவு என்பது குறித்த அனைத்து தகவல்களையும் பெற முடியும். இதற்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1950 தொடர்பு கொள்ள வேண்டும். அவ்வாறு இந்த எண்ணில் தொடர்பு கொண்டால் தேர்தல் தொடர்பான  புகார்களை பதிவு செய்வதுடன், வாக்காளர்கள் தங்களது வாக்குப்பதிவு  தொடர்பாகவும் தெரிந்து கொள்ள முடியும்.

Related Stories: