×

குடும்ப தகராறில் பெண் தற்கொலை

கும்பகோணம், மார்ச் 20: கும்பகோணம் அருகே குடும்ப தகராறில் தீக்குளித்து பெண் தற்கொலை ெசய்து ெகாண்டார். கும்பகோணம் அடுத்த நரசிங்கம்பேட்டை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தினேஷ். கொத்தனாரான இவருக்கு சத்யபிரியா (22) என்ற மனைவி உள்ளார். இவர் கடந்த 18ம் தேதி மாலை குடும்ப பிரச்னை காரணமாக வீட்டில் மண்ணெண்ணெயை ஊற்றி சத்யபிரபா தீவைத்து கொண்டார். இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு சத்யபிரபா இறந்தார். இதுகுறித்து திருநீலங்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை