×

கறம்பக்குடி அருகே மரத்திலிருந்து தவறி விழுந்து பள்ளி மாணவர் பரிதாப பலி

கறம்பக்குடி, மார்ச் 20: கறம்பக்குடி அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவர் பலியானார். கறம்பக்குடி மலையூர் அருகே உள்ள தீத்தானிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ், கொத்தனார். இவருக்கு மனைவி மாரிக்கண்ணு மற்றும் மகன்கள் ராஜேஷ், ராஜ்குமார், சூர்யா ஆகிய  3 மகன்கள் உள்ளனர். இதில் 3வது மகன் சூர்யா மலையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1  படித்து வருகிறார். இவர் நேற்று காலை தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு தளை ஒடித்து போடுவதற்காக புளிய மரத்தில் ஏறி உள்ளார். அப்போது மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த சூர்யாவை உறவினர்கள் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே சூர்யா இறந்தார். இவரது உடல் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர் மரத்தில் இருந்து தவறி விழுந்து இறந்த சம்பவம் குடும்பத்தினரிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : school student ,Karambukudi ,
× RELATED சத்தியமங்கலம் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி