×

புதுக்கோட்டையில் அரசு மருத்துவமனை பணிக்கு போலி பணி நியமன ஆணை 3 பேர் கைது

புதுக்கோட்டை, மார்ச் 20: புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அரசு பணிக்கு போலி பணி ஆணை வழங்கியது சம்பந்தமாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள பிலாவிடுதியை சேர்ந்த முத்துராசு மகன் கார்த்திகேயன்(23). இவர், தன்னை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருந்தாளுனராக அரசு நியமனம் செய்து உள்ளதாகக் கூறி, பணி நியமன ஆணையை எடுத்துக் கொண்டு நேற்று முன்தினம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து மருத்துவ கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரத்திடம் பணி ஆணையை கொடுத்தார். அப்போது பணிநியமன ஆணையில் முதல்வரின் கையெழுத்து போலியாக போட்டிப்பது தெரியவந்தது.

தொடர்ந்து மீனாட்சி சுந்தரம் இதுகுறித்து புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினார். விசாரணையில், கறம்பக்குடி அருகே உள்ள நரங்கியப்பட்டு கிராமத்தை பிரபாகரன்(33) என்பவர் மூலம் புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியை சேர்ந்தவரும்  அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மிகவும் நெருக்கமானவருமான விக்னேஷ்வரன்(25) என்பவரிடம் ரூ.2 லட்சத்தை கொடுத்து, மருத்துவ கல்லூரி முதல்வரின் கையெழுத்தை போலியாக போட்டு, போலி பணி நியமன ஆணை தயாரித்தது தெரியவந்தது. தொடர்ந்து கார்த்திகேயன், பிரபாகரன், விக்னேஷ்வரன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : persons ,government hospital ,Pudukottai ,
× RELATED 23ம்தேதி நடக்கிறது ஆம்புலன்ஸில் குவா…குவா…