×

தேர்வு முடிந்த மகிழ்ச்சியை கொண்டாடி பிரியாவிடை பெற்ற பிளஸ் 2 மாணவர்கள்

புதுக்கோட்டை, மார்ச் 20: பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு நேற்று தேர்வு நிறைவடைந்தது. இதையடுத்து மாணவ, மாணவிகள் தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தியதோடு, பிரியாவிடை பெற்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த மார்ச் 1ம் தேதி பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு அரசு பொதுத்தேர்வு தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள புதுக்கோட்டை, அறந்தாங்கி, இலுப்பூர் ஆகிய 3 கல்வி மாவட்டங்களை சேர்ந்த 21 ஆயிரத்து 96 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இதில் 283 பேர் தனித்தேர்வர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் 81 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் நேற்று பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு தேர்வு நிறைவடைந்தது. மாணவ, மாணவிகள் சிலர் வண்ண சாயப்பொடியை ஒருவருக்கொருவர் தூவி சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்கள். மாணவிகள் அவர்களுக்குள் கை குலுக்கி, ஆரத்தழுவி, செல்பி எடுத்தும் பிரியாவிடை பெற்றனர்.

Tags :
× RELATED கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவித்த...