புதுக்கோட்ட, மார்ச் 20: புதுக்கோட்டையில் அதிமுக சார்பில் நூறு அடி கொடிக்கம்பம் அமைத்து அகற்றப்படாததால் அதிமுக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்திற்கான 39 நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. இதனால் பொது இடங்களில் கட்சிகளின் கொடிகள், பேனர்கள் இருந்தால் அதனை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில் புதுக்கோட்டை கருவேப்பிலான் ரயில்வே கேட் பகுதியில் அதிமுக சார்பில் 100 அடி கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு இருந்தது. இதனை அகற்றாததால் அதிமுகவை சேர்ந்த மச்சுவாடி விக்கி மீது திருக்கோர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர் சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.