×

தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

அரியலூர், மார்ச் 20: அரியலூர் மாவட்டத்தில் ேதர்தல் பணியாற்றி முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 65 வயதுக்கு உட்பட்ட நல்ல உடல் திறனுள்ள அடையாள அட்டை பெற்றுள்ள முன்னாள் இளநிலை படை அலுவலர்கள், முன்னாள் படைவீரர்கள் தேர்தல் பாதுகாப்பு பணிபுரிய வாய்ப்பு வழங்கப்பட்டது. இதற்கு தகுதியான, விருப்பம் உள்ளவர்கள் தங்களது அடையாள அட்டை மற்றும் வாக்காளர் அட்டையுடன் உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், 72ஏ, புதிய மார்க்கெட் தெரு, அரியலூர் என்ற முகவரியில் ெதாடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04329 221011 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

Tags : Ex-servicemen ,
× RELATED இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8...