×

வாக்களிப்பது தொடர்பான தேர்தல் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

ஜெயங்கொண்டம், மார்ச்20: தமிழகத்தில் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு பிரசார கலைநிகழ்ச்சி நடைபெற்றது. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தவறாமல் 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க வேண்டும், வாக்காளர் பதிவேட்டில் தங்களது பெயரை சரிபார்க்க வேண்டும், ஜனநாயக கடமையை நிலைநாட்ட வேண்டும்,எக்காரணம் கொண்டும்வாக்களிக்காமல் இருக்க கூடாது உள்ளிட்டவற்றை பற்றிய விழிப்புனர்வு கலை நிகழ்ச்சி மூலம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புனர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மண்டல துணை தாசில்தார்மீனா,வருவாய் ஆய்வாளர் சிவசக்தி,உதவியாளர் ராஜராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED பெரம்பலூர் /அரியலூர் கொள்ளை நோய் பரவலை...