×

கீழப்பழுவூர் காவல் நிலையத்தில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

அரியலூர்,மார்ச்20: அரியலூர் மாவட்டம்,கீழப்பழுவூர் காவல் நிலையத்தில் குடிநீர் தொட்டிற்கு செல்லும் பைப் உடைந்து தண்ணீர் வீணாகி குட்டைபோல் தேங்கியுள்ளது. இதனால் நோய் பரவும் அபயாம் உள்ளது. கீழப்பழுவூர் காவல் நிலையத்தில் தண்ணீர் தொட்டிற்கு செல்லும் குழாய் உடைந்து தண்ணீர்  வீணாகிறது. தற்போது கோடைகாலம் என்பதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலையில் காவல் நிலையத்தில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து  தண்ணீர் வீணாகி யாருக்கும் பயன்படாமல் கீழே செல்கிறது. இதனால் இப்பகுதியில் சாக்கடை நீராக மாறி கொசுக்கள் உற்பத்தியாக  உதவியாக உள்ளது. இதன் அருகில் கீழப்பழுவூர் பேருந்து நிலையம்  உள்ளது.  மேலும் கீழப்பழுவூர் நால்வர்களால் பாடல் பாடப்பெற்ற கோயில் ஸ்ரீஆலந்துறையார் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு அருகில் உள்ள சாக்கடை நீரால் பெரும் அவதி ஏற்படுகிறது.  உடைந்த குழாயை சரிசெய்து குடிதண்ணீரை வீணாக்காமல் சரிசெய்ய வேண்டும் என்று மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : police station ,Kaytspalur ,
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...