×

சீர்காழியில் கஞ்சா விற்ற பெண் கைது

சீர்காழி, மார்ச் 20: சீர்காழியில் கஞ்சா விற்ற பெண் கைது செய்யப்பட்டார். சீர்காழி ஈசான்ய தெருவில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக நாகை எஸ்பி விஜயகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் ஈசான்ய தெருவில் சோதனை நடத்தினர். அப்போது அனுமந்தராஜ் என்பரின் மனைவி திரிபுரசுந்தரி 30 என்பவர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து திரிபுர சுந்தரியை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : Sirkali ,
× RELATED சீர்காலி கடைவீதியில் மருத்துவ குணம் கொண்ட செவ்வாழை பழம் விற்பனை