×

மயிலாடுதுறை அருகே காரில் கடத்திய புதுவை மதுபாட்டில்கள் பறிமுதல் இருவர் கைது

மயிலாடுதுறை, மார்ச் 20: மயிலாடுதுறை அருகே காரில் கடத்திவரப்பட்ட காரைக்கால் மதுபாட்டில்களை மதுவிலக்கு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். மயிலாடுதுறை அருகே சோழசக்கரநல்லூர் பகுதியில் மதுவிலக்குப் பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் காரைக்கால் மதுபாட்டில்கள் 10 பெட்டிகளில் இருந்தது. மேலும் பாண்டிசாராயம் ஆயிரம் லிட்டர் இருந்தது. இதுதொடர்பாக போலீசார் வைத்தீஸ்வரன்கோவிலை சேர்ந்த கார் டிரைவர் தினேஷ்குமார்(21), சீனிவாசபுரத்தை சேர்ந்த ராஜா(47) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் மதுபாடடில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags : persons ,robbery ,Mayiladuthurai ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடியில் பணியாற்ற...