×

கரூர் பிரம்மதீர்த்தம் சாலையில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு

கரூர், மார்ச் 20: கழிவுநீரை அகற்ற பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் பிரம்மதீர்த்தம் சாலையில் பல சந்துகள் உள்ளன. இந்த சந்து பகுதியில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் கலந்து விடுகிறது. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரும் சாலையில் வருகிறது. லேசான மழை பெய்தால் கூட சாலையில் கழிவுநீர் தேங்கி விடுகிறது. பிரம்மதீர்த்தம் சாலை பகுதியில் ஏற்படும் சுகாதார சீர்கேட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : road ,Karur Brahmatirtham ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...