×

குளித்தலை பஸ் நிலையத்தில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

குளித்தலை, மார்ச் 20: தமிழகத்தில் 40 எம்பி தொகுதி மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பொதுமக்கள் வரும் தேர்தல்களில் 100 சதவீதம் வாக்களிப்பதற்கு ஒத்துழைக்கிறேன். என் வாக்கு விற்பனைக்கு இல்லை என உறுதிமொழி ஏற்று குளித்தலை நகராட்சி சார்பில் பஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள பலகையில் கையெழுத்து போடும் முகாம் நடைபெற்றது.முகாமை உதவி தேர்தல் அலுவலர் லியாக்கத் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். வட்டாட்சியர் சிவக்குமார், நகராட்சி பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் பொதுமக்கள் வாக்காளர்கள் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.

Tags : bath bus station ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...