கரூர், மார்ச் 20: கல்யாண பசுபதீசுவரர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அலங்காரவல்லி சவுந்தரநாயகி உடனாகிய கரூர் கல்யாண பசுபதீசுவரர் கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 12ம் தேதி விழா தொடங்கி 13ம் தேதி கொடியேற்று விழா நடைபெற்றது. தினமும் காலை பல்லக்கு, மாலை சாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. நேற்று முக்கிய விழாவான திருக்கல்யாணம் கோயிலில் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாண விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.