பெண்ைண மிரட்டிய தொழிலாளி கைது

வீரவநல்லூர், மார்ச் 20: சேரன்மகாதேவி அருகே உள்ள மேலக்கூனியூரை சேர்ந்தவர் மகாராஜன் மனைவி சாந்தி (47). இவர், கடந்த சில மாதங்களுக்கு முன் சேரன்மகாதேவி அசோக் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அப்போது இதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜ்குமார்(35) என்பவருக்கும்  முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் பத்தமடை தனியார் மருத்துவமனைக்கு சென்று வந்த சாந்தியை ராஜ்குமார் வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.    இதுகுறித்து சாந்தி கொடுத்த புகாரின் பேரில் பத்தமடை எஸ்ஐ வள்ளிநாயகம் (பொறுப்பு) வழக்கு பதிந்து ராஜ்குமாரை கைதுசெ ய்து பாளை சிறையில் அடைத்தார்.

Related Stories: