நெல்லை தொகுதி அமமுக வேட்பாளர் இன்று நெல்லை வருகை

நெல்லை, மார்ச் 20: நெல்லை மாநகர மாவட்ட அமமுக செயலாளர் கல்லூர் வேலாயுதம், தெற்கு மாவட்ட செயலாளர் சொக்கலிங்கம் ஆகியோர் கூட்டாக வௌியிட்ட அறிக்கை:  நெல்லை நாடாளுமன்றத் தொகுதி அமமுக வேட்பாளர் அருள்ஞானமணி இன்று (20ம் தேதி) காலை 9 மணிக்கு நெல்லை வருகிறார். இதையொட்டி சந்திப்பு நயினார் காம்ப்ளக்ஸ் அலுவலகத்தில் நடைபெறும் அணி நிர்வாகிகள் அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார்.

மேலும் காலை 10 மணிக்கு நெல்லை சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கும், கொக்கிரகுளத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு காலை 10.30 மணிக்கு நடக்கும் அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார். எனவே, நிகழ்ச்சிகளில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழகம், கிளை கழக நிர்வாகிகள், இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, பேரவை, தொழிற்சங்கம், வக்கீல் அணி, கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் அணி திரண்டுவருமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Related Stories: