×

கீழப்பாவூரில் பேரூராட்சி ஊழியர் மீது தாக்குதல்

பாவூர்சத்திரம், மார்ச் 20:  கீழப்பாவூர் பேரூராட்சி ஊழியரை தாக்கியவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.கீழப்பாவூர் பேரூராட்சியில் குடிநீர் திட்ட உதவியாளராக பணியாற்றி வருபவர் முத்துசாமி (56). பேரூராட்சி நிர்வாக அதிகாரி கண்மணி உத்தரவின்பேரில் வீட்டு குடிநீர் இணைப்புகளில் மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளனவா? என்று இவர், பேரூராட்சி ஊழியர் முத்துசாமி, பேரூராட்சி பம்ப் மெக்கானிக் தர்மராஜ், சுகாதார பணியாளர் ராஜன் ஆகியோர் 11வது வார்டு பகுதியில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது குத்தாலிங்கம் மகன் மகாராஜா என்பவர் வீட்டில் முறைகேடாக மின் மோட்டார் பொருத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து பேரூராட்சி பணியாளர்கள், மகாராஜாவிடம் தெரிவித்து மின்மோட்டாரை அகற்றினர். இதனால் ஆத்திரமடைந்த மகாராஜா, முத்துசாமியை தாக்கி உள்ளார். இதில் கையில் காயமடைந்த அவர், சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து கீழப்பாவூர் பேரூராட்சி சார்பில் பாவூர்சத்திரம் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிந்து மகாராஜாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Panchayat Employee ,
× RELATED தென்காசியில் ராம் நல்லமணி யாதவா கல்லூரி பட்டமளிப்பு விழா