நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு

நாங்குநேரி, மார்ச் 20: நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்கள் குழுவினர் ஆய்வு செய்தனர். நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் நேற்று மதியம் தேர்தல் பணியாளர்களுக்கான கூட்டம் நடந்தது. நெல்லை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட நாங்குநேரி, ராதாபுரம், பாளை. ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் செலவின பார்வையாளராக யமிக்கப்பட்ட தேர்தல் அலுவலர் மேற்குவங்கத்தை சேர்ந்த ராஜாகோஸ் தலைமையிலான அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் தேர்தல் பணிகளில் எவ்வாறு செயல்பட வேண்டும் என ராஜாகோஸ் விளக்கம் அளித்தார். அவருடன் நாங்குநேரி தாசில்தார் ரஹ்மத்துல்லா, தேர்தல் பிரிவு தாசில்தார் பகவதிபெருமாள், தேர்தல் அலுவலர் நடேசன், மற்றம் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Related Stories: