×

லாரி - கார் மோதி விபத்து தென்காசியை சேர்ந்த அண்ணன் - தம்பி பலி

நெல்லை, மார்ச் 20: மண்டபம் அருகே லாரி - கார் மோதிய விபத்தில் தென்காசியை சேர்ந்த அண்ணன், தம்பி பலியாகினர். 7 பேர் படுகாயமடைந்தனர். தென்காசி இலஞ்சியை சேர்ந்த இசக்கி ராஜா (42), ஆய்க்குடி சுரேஷ் (20), அனந்தபுரம் ஆறுமுகம் (30), ராஜூ (23), இசக்கி மகன்கள் குட்டி (26), மகாராஜா (25), சுரேஷ் (20) ஆகியோர் நேற்று அதிகாலை காரில் ராமேஸ்வரத்திற்கு சென்றனர். தரிசனத்தை முடித்து விட்டு ஊர் திரும்பினர்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே பிரப்பன்வலசை தேசிய நெடுஞ்சாலையில் சாத்தக்கோன்வலசை பகுதியில் கார் சென்றபோது, தினைக்குளத்தில் இருந்து செங்கல் ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இந்த விபத்தில் தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்த அண்ணன், தம்பிகளான குட்டி, மகாராஜா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காரில் வந்த 5 பேரும் பலத்த காயமடைந்ததால், ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். லாரியில் வந்தவர்களில் காயமடைந்த தொழிலாளர்களான பெருமாள்கோவில் கோவிந்தராஜ் (27), ஆனந்த ராஜ் (31) ஆகியோர் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்து தொடர்பாக லாரி டிரைவர் புத்தேந்தல் மாதவனை, உச்சிப்புளி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Larry ,brother ,Tenkasi ,
× RELATED தென்காசி மாவட்டம் மைப்பாறை அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து