கொம்மடிக்கோட்டை பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற விழா

சாத்தான்குளம், மார்ச் 20:சாத்தான்குளம் அருகேயுள்ள கொம்மடிக்கோட்டை எஸ்.எஸ்.என். அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற விழா நடந்தது. அறிவியல் பட்டதாரி ஆசிரியை நாகம்மாள் தலைமை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் கருணாகரன், உடற்கல்வி ஆசிரியர் சித்திரைவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் மாணவிகளின் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நாடகம், 6ம் வகுப்பு மாணவர்கள் சந்தியாகுமார், நரேன், 7ம் வகுப்பு மாணவர்கள் ரித்திஷ், நிதிஷ், குருசாமி, மாணவி வர்ஷினி ஆகியோர் சிலம்பம், மேஜிக் ஷோ, கதை, பறை இசைத்து தங்களது கலைநயத்தை வெளிப்படுத்தினர். விழாவில் தமிழ் இலக்கியம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. தமிழ் ஆசிரியர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Related Stories: