×

தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயிலில் பங்குனி உத்திர விழா இன்று துவக்கம்

உடன்குடி,மார்ச் 20: தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயில் பங்குனி உத்திரதிருவிழா இன்று மாவிளக்கு பூஜையுடன் தொடங்குகிறது.உடன்குடிஅருகேயுள்ள தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயில் பங்குனி உத்திரதிருவிழா இன்று (20ம் தேதி) மாலை 6மணிக்கு மாவிளக்கு பூஜையுடன் தொடங்குகிறது.  தொடர்ந்து இரவு 7மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது. பங்குனி உத்திரமான 21ம் தேதி காலை 9.30 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டு வருதலும், காலை 10 மணிக்கு வில்லிசையும், காலை 11 மணிக்கு சுவாமி கற்குவேல் அய்யனார் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், பகல் 12மணிக்கு அன்னதானமும் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் விசுவநாதன், செயல்அலுவலர் இசக்கியப்பன் ஆகியோர் செய்து வருகின்றனர்.



Tags : Ayyarar ,
× RELATED தருவைகுளத்தில் திருப்பயணிகள் இல்லம் திறப்பு