தூத்துக்குடி தெற்கு மாவட்ட தமாகா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி, மார்ச் 20: தூத்துக்குடி தெற்கு மாவட்ட த.மா.கா. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.தூத்துக்குடி தெற்கு மாவட்ட தமாகா சார்பில் நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் தலைமை வகித்து பேசினார். மாவட்ட மகிளரணி தலைவி தங்கத்தாய் பிரபாகரன், மாவட்ட துணை தலைவர் மூக்கன்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில எஸ்.சி.எஸ்.டி., பிரிவு துணை தலைவர் பாக்கியராஜ், வட்டார தலைவர்கள் கீரனூர் முருகேசன், திருவை அய்யம்பாண்டி, சிங்கப்பன், கருங்குளம் நயினார், திருச்செந்தூர் சுந்தரலிங்கம், சாத்தான்குளம் மாறன், இளையராஜா, நகர தலைவர்கள் ஆறுமுகநேரி முருகன், கானம் தங்கவேல், திருச்செந்தூர் ராமச்சந்திரன், ஆழ்வை பொன்ராஜ், ஏரல் நல்லமுத்து, மாவட்ட இளைஞரணி தலைவர் அருண்நேருராஜ், மாவட்ட மாணவரணி தலைவர் பொன்ராஜ், மாவட்ட சிறுபான்மைபிரிவு தலைவர் டேவிட் பெர்னாட், மாவட்ட துணை தலைவர் ரவிகுமார், சீனிவாசன், ரவீந்திரன், தேரடிமுத்து, சிவபால்ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் வெற்றிக்கு பாடுபடுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: