புத்தாக்க பயிற்சி

கோவில்பட்டி, மார்ச் 20: கோவில்பட்டி ஜி.வி.என்.கல்லூரியில் செஞ்சுருள் சங்கம் சார்பில் சங்க தொண்டர்களுக்கான புத்தாக்க பயிற்சி நடந்தது. கல்லூரி முதல்வர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். கோவில்பட்டி அரசு மருத்துவமனை நம்பிக்கை மையம் ஆலோசகர்கள் சுதா, சாந்தா, ரேவதி ஆகியோர் செஞ்சுருள் சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் நோக்கம் பற்றியும், ஹெச்ஐவி பற்றியும் மாணவ, மாணவியரிடம் கலந்துரையாடினர். பின்னர் மாணவ, மாணவியரின் ஹெச்ஐவி சந்தேகங்களுக்கான கேள்விகளுக்கு அவர்கள் பதிலளித்தனர். ஏற்பாடுகளை கல்லூரியின் செஞ்சுருள் சங்க பொறுப்பாளர் கவிதாமஞ்சு மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

Related Stories: