தூத்துக்குடி, மார்ச் 20: தூத்துக்குடி கமாக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது. தூத்துக்குடி கமாக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த மழலையர் பட்டமளிப்பு விழாவிற்குபள்ளி நிர்வாக உறுப்பினர்கள் தலைமை வகித்தனர். ஆசிரியர்கள் முன்னிலையில் வகித்தனர்.விழாவில் மழலையர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் விதமாக அமைந்த நாடகம், அனைவரையும் கவர்ந்தது. தொடர்ந்து சிறுவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.