×

தூத்துக்குடியில் திடீர் மழை

தூத்துக்குடி, மார்ச் 20: தூத்துக்குடியில் கடந்த ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று காலை 6.30 மணியில் இருந்து 7 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் காலையில் இதமான சூழ்நிலை உருவானதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தூத்துக்குடி நகர் பகுதிகளில் மழை நீர் தேங்கியது. குரூஸ்பர்னாந்த் சிலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியது. இருந்த போதும் காலை 10 மணிக்கு பின்னர் வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிகமானது.


Tags : Thoothukudi ,
× RELATED தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று...