தூத்துக்குடி, மார்ச் 20: பல்வேறு கட்சியினரின் கோரிக்கை மற்றும் போராட்டத்தை தொடர்ந்து தூத்துக்குடியில் தலைவர்கள் சிலைகளை மூடி வைத்திருந்த துணிகள் அகற்றப்பட்டது.நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகளையொட்டி தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த காந்தி, காமராஜர், வஉசி, குரூஸ்பர்னாந்து, அண்ணா, எம்ஜிஆர் சிலைகளை மாநகராட்சி அதிகாரிகள் மூடி மறைத்திருந்தனர். இதனால் அனைத்து கட்சியினரும் அதிர்ச்சியடைந்தனர். மறைந்த தலைவர்கள் சிலைகளை மூடி மறைக்க வேண்டிய அவசியமில்லை என தேர்தல் கமிஷன் நடத்தை விதிமுறைகளை அரசியல் கட்சிகள் மேற்கோள் காட்டி அவற்றை அகற்ற வலியுறுத்தினர்.