தூத்துக்குடி, மார்ச் 20: தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக இதுவரையில் 49 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்தம் 16 லட்சத்து 85 ஆயிரத்து 900 ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அkலில் உள்ள நிலையில் விதிமுறைகள் மீறல் தொடர்பாகவும், பணம் பட்டுவாடா உள்ளிட்ட நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் இணைந்து சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக வாகனங்கள் தீவிரமாக சோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கணக்கு இல்லாத மற்றும் ஆவணங்கள் இல்லாத பணம் இருந்தால் பறக்கும்படையினர் பறிமுதல் செய்து அதனை கருவூலத்தில் ஒப்படைக்கின்றனர்.