×

கல்லால் அடித்து வாலிபரை கொல்ல முயற்சி 3 பேருக்கு வலை

ஆவடி, மார்ச் 20: ஆவடி அடுத்த திருநின்றவூர், ஐ.வி.ஒய் நகரை சேர்ந்தவர் குமார் மகன் கதிரவன் (18).  நேற்று முன்தினம் இரவு கதிரவனை அவரது நண்பர்கள் சதீஷ், அஜித், முகேஷ் ஆகியோர் செல்போனில் அழைத்துள்ளனர்.  அவரும் பட்டாபிராம், உழைப்பாளர் நகர், 5வது தெருவுக்கு சென்றுள்ளார். அப்போது, 3 பேரும் கதிரவனிடம் தகராறில் ஈடுபட்டு அவரை அடித்து உதைத்து, கல்லால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.இதில், கதிரவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் அக்கம் பக்கத்தினர் கதிரவனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்த, புகாரின் பேரில் பட்டாபிராம் போலீஸ் சப்.இன்ஸ்பெக்டர் பாலாஜி வழக்குப்பதிவு செய்து கதிரவனை தாக்கிய 3 நண்பர்களை தேடி வருகிறார்.


Tags :
× RELATED வெளிமாநில தொழிலாளர்களுக்கு...