×

பிரமாண பத்திரத்தை மீறிய குற்றவாளி சிறையில் அடைப்பு


திருவொற்றியூர், மார்ச் 20: எண்ணூரில் பிரமாண பத்திரத்தை மீறிய பிரபல ரவுடிக்கு 350 நாள் சிறை தண்டனை விதித்து மாதவரம் போலீஸ் துணை கமிஷனர் நடவடிக்கை எடுத்துள்ளார்.எண்ணூர் சுனாமி குடியிருப்பு 24வது பிளாக்கில் வசித்து வருபவர் பிரபு என்கிற கீரைபிரபு (37). இவர் மீது 2 கொலை, கொலை முயற்சி, அடிதடி போன்ற வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் இவர் மாதவரம் போலீஸ் துணை  கமிஷனர் ரவாளி பிரியாவிடம் இனிமேல் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டேன் என்று சில தினங்களுக்கு முன்பு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். அதன்பேரில் அவர் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 3ம் தேதி  திருவொற்றியூரை சேர்ந்த கோபி என்பவர் எர்ணாவூர் பாரத் நகர் அருகே நடந்து சென்றபோது கீரை பிரபு கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவுசெய்த எண்ணூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி  ரவுடி கீரை பிரபுவை கைது செய்து மாதவரம் துணை கமிஷனர் மூன்பு ஆஜர்படுத்தினர். பிரமாணப் பத்திரத்தை மீறி அவர் மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்டதால் கீரை பிரபுவிற்கு 350 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு அவர்  சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags : Convicts ,jail ,
× RELATED பல்லடத்தில் 4 பேரை வெட்டிக் கொன்ற...