×

நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி பட்டாசு இருந்த குடோன்களுக்கு ‘சீல்’

திருவள்ளூர், மார்ச் 20: தேர்தல் அலுவலர் உத்தரவின் பேரில், பட்டாசு கடைகள் மற்றும் குடோன்களுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் போலீசார் சீல் வைத்து கண்காணித்து வருகின்றனர்.தமிழகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பட்டாசு கடைகள் மற்றும் குடோன்களை மூடி சீல் வைப்பதற்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும்,  கலெக்டருமான மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவிட்டிருந்தார்.

இதை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு கடைகளிலும் இருப்பு விவரங்களை போலீசார் கண்காணித்து குறித்து வைத்துக் கொண்டனர். தேர்தல் முடிவு வெளியாகும் வரை பட்டாசு கடைகளை மூடி வைக்கவும்  அறிவுறுத்தினர்.
தொடர்ந்து அனைத்து பட்டாசு கடைகள் மற்றும் குடோன்களுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் போலீசார் ‘சீல்’ வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Kudans ,election ,Battas ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...