×

கார் டிரைவர் தற்கொலை

செங்கல்பட்டு, மார்ச் 20: திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை சேர்ந்தவர் அருண் (எ) மருதநாயகம் (40).  கார் டிரைவர். சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள ஒரு கால்டாக்ஸி கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு  திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில், மறைமலைநகர் பஸ் நிலையம் அருகே ஒரு மரத்தில், நேற்று காலை ஆண் சடலம் தூக்கிட்டு இருந்தது. அதை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து மறைமலைநகர் போலீசர், சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி  செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், கால் டாக்சி டிரைவர் அருண் என தெரிந்தது. அவரது, டைரியை கைப்பற்றி பார்த்தபோது, கடன் அதிகமாக உள்ளது. கடந்த 2 மாதங்களாக காருக்கான தவணை  கட்டவில்லை. தனக்கு யாரும் உதவவில்லை என எழுதியிருந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.


Tags : Car driver suicide ,
× RELATED குடும்ப தகராறில் கார் டிரைவர் தற்கொலை