×

ஓட, ஓட விரட்டி வாலிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

தாம்பரம், மார்ச்  20: வண்டலூர் அடுத்த ஓட்டேரியை சேர்ந்தவர் சுல்தான் (21). நேற்று முன்தினம் இரவு சுல்தான், அகரம்தென் பிரதான சாலையில் திருவஞ்சேரிக்கு சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த 3 பேர்,  திடீரென சுல்தானை மறித்து, அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்ட முயன்றனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், அங்கிருந்து தப்பியோடி, அருகில் உள்ள ஒரு ஓட்டலுக்குள்  புகுந்துள்ளார்.ஆனால் மர்மநபர்கள், அவரை விரட்டி சென்று, ஓட்டலுக்குள் புகுந்த சுல்தானை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பினர்.

தகவலறிந்து சேலையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று படுகாயமடைந்த சுல்தானை, மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் போலீசார்  வழக்ப்பதிவு செய்து விசாரித்தனர்.
அதில், சுல்தானின் நண்பர் உதயா என்பவர், கடந்த ஒரு ஆண்டுக்கு முன் ஊரப்பாக்கம் பகுதியில் வெட்டி கொலை செய்யப்பட்டார். உதயாவின் நண்பர் என்பதால், அவரையும் மர்மநபர்கள் வெட்டியதாக தெரிந்தது. மேலும்  விசாரணையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூர்யாவின் கூட்டாளியான சோட்டா வினோத் (29) மற்றும் அவரது நண்பர்கள் என தெரியவந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில்...