×

சினேகம் குரூப் ஆப் கம்பெனியில் பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை பெறலாம்

சென்னை: சினேகம் குரூப் ஆப் கம்பெனியில் முதலீடு ெசய்து பாதிக்கப்பட்டவர்கள் உரிய ஆவணத்தை காண்பித்து, பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவித்துள்ளனர்.இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:கடந்த 1996ம் ஆண்டு சினேகம் குரூப் ஆப் கம்பெனியில் பல மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பணத்தை செலுத்தி, திரும்ப பெற முடியாத நிலை ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் சென்னையில் உள்ள கிண்டி,  திரு.வி.க.நகர் எஸ்டேட்டில் அமைந்துள்ள பொருளாதார குற்றப்பிரிவு, காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வரும் 21ம் தேதி முதல் பொருளாதார குற்றப்பிரிவு, கிண்டி, சென்னை-32,  என்ற முகவரியில் முதலீட்டாளர்களுக்கு  டிஆர்ஓ மூலமாக பணத்தினை திருப்பி தர உள்ளதால், பாதிக்கப்பட்ட முதலீட்டார்கள் முதலீடு செய்த அசல் ரசீது, வங்கி கணக்கு புத்தக நகல், அடையாள அட்டை நகல், முதலீட்டாளர் இறந்து இருப்பின், வாரிசுதாரர் வாரிசு  சான்றிதழின் நகலை தவறாமல் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Tags : victims ,Sneham Group App Company ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் மயங்கி விழுந்து 2 பேர் பலி: சேலத்தில் சோகம்