அன்னூர், மார்ச் 19:அன்னூரில் தொழிலாளர்களை ஏற்றி வந்த தனியார் மில்லுக்கு சொந்தமான வேன் மோதியதில் சாலையில் நடந்து சென்ற 3 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர். கோவை அருகே அன்னூரில் உள்ள திரையரங்கம் முன்பு குன்னத்தூர் பகுதியை சேர்ந்த சம்பத்குமார் (45), பீகார் சமத்திபூர் பகுதியை சேர்ந்த சத்துருக்கன் மகன் சந்தன் (25), அதே பகுதியை சேர்ந்த தேவ் நாராயண் மகன் தீபக் (16) ஆகியோர் நேற்று இரவு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.அப்போது, அன்னூரில் இருந்து தனியார் மில்லுக்கு சொந்தமான வேன், தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது. அன்னூர் திரையரங்கம் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரம் நடந்து சென்ற மூவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.