×

கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது

திருப்பூர், மார்ச் 19:  திருப்பூரில் கூலித்தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் பல்லடம் ரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகே கடந்த 14ம் தேதி நள்ளிரவு ரோட்டோரம் தூங்கிக்கொண்டிருந்த 55 வயது மதிக்கதக்க கூலித்தொழிலாளியை 5 பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, அவரிடம் இருந்து பணத்தை பறித்து சென்றனர்.இதை தடுக்க முயன்ற 3 பேரை அந்த கும்பல் தாக்கியது. இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். சம்பவ இடத்தில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் கொலையாளிகள் அடையாளம் தெரிந்தது. அதன்படி வீரபாண்டி நாச்சிபாளையத்தை சேர்ந்த பாஸ்கர் (23), பெரியதோட்டத்தை சேர்ந்த இம்ரான்கான்(24), பெரிச்சிபாளையத்தை சேர்ந்த அரவிந்தன் (21) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். 2 பேரை தேடி வந்தனர்.இந்நிலையில் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய பெரியதோட்டத்தை சேர்ந்த சிராஜூதீன் (24), பழைய பஸ் நிலையம் பகுதியை சேர்ந்த முகேஷ் (27) ஆகிய 2 பேரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். இவர்கள் 5 பேரும் சமையல் தொழிலாளிகள் ஆவார்கள். கொலையாள கூலித் தொழிலாளியின் அடையாளம் இதுவரை தெரியவில்லை. அவர் யார் என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED ஈரோடு பகுதியில் இன்று மின்தடை