பொள்ளாச்சி கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்

ஈரோடு, மார்ச் 19:  ‘‘அரசியல் கட்சி தலைவர்கள் சிலைகளை மறைப்பதால் வாக்காளர்கள் மத்தியில் எந்த மாற்றமும் ஏற்படாது,’’ என பாஜ.,தேசிய செயற்குழு உறுப்பினர் இல கணேசன் தெரிவித்தார். பாஜ., ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர், நீலகிரி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது.  இதில் பங்கேற்ற பாஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்களவை தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றிபெற வேண்டும் என்பது தான் எங்களின் இலக்கு. அதனை நோக்கி தீவிரமாக பணியாற்றி வருகிறோம். 40 தொகுதிகளிலும் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. பொள்ளாச்சி கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். மத்திய அரசின் செயல்பாடுகளால் தமிழகத்தில் பாஜ., வுக்கு ஆதரவு பெருகிவருகிறது. அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகளை மறைப்பதாலும், கோயில் ஓவியங்களை அழிப்பதாலும் வாக்காளர்கள் மத்தியில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. தமிழகத்தில் நடிகர்கள் நடிகர்களாக மட்டுமே இருந்துகொண்டு தேர்தலில் போட்டியிடவில்லை.அரசியல் கட்சியை தொடங்கி தான் போட்டியிடுகிறார்கள். அதில் தவறு ஏதும் இல்லை.ஆனால் யாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். இவ்வாறு இல கணேசன் கூறினார்.

Related Stories: