×

அந்தியூர் அருகே கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு

அந்தியூர், மார்ச் 19: அந்தியூர் அருகே கிணற்றில் விழுந்த பசு மாடு உயிருடன் மீட்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள குரும்பபாளையம் சேத்துகுட்டை தோட்டத்தை சேர்ந்தவர் கணேசன் (60). தமக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து கொண்டு பசு மாடுகள் வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று மதியம் மேய்ச்சலுக்காக சென்ற பசு மாடு ஒன்று கால் தவறி 40 அடி ஆழமுள்ள அவரது தோட்டத்து கிணற்றுக்குள் விழுந்து விட்டது. இதுகுறித்து அந்தியூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.  நிலைய அலுவலர் ராஜேஸ்வரன் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி, தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த பசுவை கயிறு மூலம் பத்திரமாக மீட்டு விவசாயிடம் ஒப்படைத்தனர். பசுவை உயிருடன் மீட்டு கொடுத்ததற்கு விவசாயி குடும்பத்தினர் தீயணைப்பு துறையினருக்கு நன்றியை தெரிவித்தனர்.

Tags : Anthiyur ,
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் 70.58 சதவீதம் வாக்குகள் பதிவு