×

மேட்டூர் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் சாவு

மேட்டூர், மார்ச் 19: மேட்டூர் அருகே கிராமத்தில் நுழைந்த புள்ளிமானை நாய்கள் கடித்து குதறியதில் உயிரிழந்தது.மேட்டூர் அருகே உள்ள சின்னமேட்டூர் கிராமத்தையொட்டி, வனப்பகுதி உள்ளது. வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால், நேற்று காலை தண்ணீர் தேடி, ஒரு வயதுடைய பெண் புள்ளிமான் கிராமத்திற்குள் வந்தது. இதை கண்ட நாய்கள், மானை விரட்டி கடித்து குதறியதில் படுகாயமடைந்தது. இதை கண்ட பொதுமக்கள், நாய்களை விரட்டி விட்டு, காயமடைந்த மானை மீட்டு, வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், மானை மீட்டு சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி மான் உயிரிழந்தது. இதையடுத்து மானை பிரேத பரிசோதனை செய்து, வனப்பகுதியில் அடக்கம் செய்தனர்.

Tags : Mettur ,
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு