ஜலகண்டாபுரம் அருகே சாலையோரம் கட்டிட கழிவுகள் கொட்டுவதால் விபத்து அபாயம்

ஜலகண்டாபுரம், மார்ச் 19: ஜலகண்டாபுரத்தை அடுத்த தோரமங்கலம் கிராமம், சின்னப்பம்பட்டி செல்லும் சாலையிலிருந்து காட்டம்பட்டி வரை செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையின் ஓரம், குடியிருப்பு பகுதிகளில் இருந்து அகற்றப்படும், கட்டிட கழிவுகளை இரவு நேரங்களில் சிலர் கொண்டு வந்து சாலையோரம் கொட்டி செல்வது வாடிக்கையாகி வருகிறது. இதனால், இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும், இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். மேலும், ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் அவ்வழியாக வரும்போது சிரமப்படுகின்றனர். எனவே, சாலையோரம் உள்ள கட்டிட கழிவுகளை அகற்றுவதோடு, அதனை கொட்டுபவர்களை கண்காணித்து அவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: