சேலம், மார்ச் 19: சேலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில், ஆகாஷ் எக்சல் மற்றும் நாமக்கல் கிருஷ்ணா (நீட்) அகாடமி இணைந்து நடத்தும், நீட் பயிற்சி நாளை (20ம் தேதி) தொடங்கி, மே 2ம் தேதி வரை 42 நாட்களுக்கு தொடர்ந்து நடக்கிறது. இதில், பிளஸ்2 தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் சேர்ந்து பயன்பெறலாம். கடந்த ஆண்டு சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் அதிக மாணவர்களை, நீட் தேர்வில் தேர்ச்சி பெறச்செய்து 350 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று, இந்தியாவில் பல்வேறு மருத்துவ கல்லூரிகளுக்கு இடம் பிடித்துள்ளனர். தமிழ் வழியில் பயின்ற காவியா மற்றும் செல்வி என்ற மாணவிகள், தற்போது திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரியிலும் கலைச்செல்வி என்ற மாணவி சென்னை முத்துகுமரன் மருத்துவ கல்லூரியிலும் பயின்று வருகின்றனர்.