×

ஓசூர் இடைத்தேர்தலில் திமுக, அதிமுக மோதல்

ஓசூர், மார்ச் 19: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக-அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, திமுக வேட்பாளராக எஸ்.ஏ .சத்யா (48) போட்டியிடுகிறார். இவர், தற்போது ஓசூர் நகர திமுக பொறுப்பாளராக இருக்கிறார்.தேன்கனிக்கோட்டையில் பிறந்த சத்யா, ஓசூர் ஆர்.வி. அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு வரை படித்துள்ளார். தொழிலதிபரான இவரது பெற்றோர் அப்புக்குட்டன்-ருக்மணி. 2001 முதல் 2006 வரை ஓசூர் நகர்மன்ற உறுப்பினராகவும், 2006 முதல் 2011 வரை ஓசூர் நகர்மன்ற தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இவர் நகர திமுக பொறுப்பாளர் ஆவதற்கு முன்பு, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட மாணவரணி அமை ப்பாளராக இருந்தார். சத்யாவிற்கு, 4ம் ஆண்டு சட்டம் படித்து வரும் ஹரிஹரன் என்ற மகன் உள்ளார்.இதேபோல், அதிமுக வேட்பாளராக ஜோதி பாலகிருஷ்ணாரெட்டி (43) அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பழைய வழக்கு ஒன்றினால் அமைச்சர் பதவியை இழந்த பாலகிருஷ்ணா ரெட்டியின் மனைவி ஆவார். பிஎஸ்சி, பிஎட் படித்துள்ள இவர், ஓசூர் அருகே ஜி.மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கு லாசியா ரெட்டி என்ற மகளும், சிராக் ரெட்டி என்ற மகனும் உள்ளனர். கடந்த 2002 முதல் அதிமுக உறுப்பினராக உள்ள ஜோதி பாலகிருஷ்ணாரெட்டி, 2006 முதல் 2011 வரை ஓசூர் ஒன்றியக்குழு கவுன்சிலராக இருந்தார்.
 

Tags : DMK ,AIADMK ,Hosur ,
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...