×

விவசாயியிடம் வழிப்பறி செய்த வெளி மாநில வாலிபர்கள் கைது

தேன்கனிக்கோட்டை, மார்ச் 19: தேன்கனிக்கோட்டை அருகே கிரிசெட்டிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புக்கார ஆச்சாரி(56). இவர், கடந்த ஜனவரி மாதம் 23ம் தேதி, தளி கூட்டுரோட்டில் சென்ற போது 2 வாலிபர்கள் வழிமறித்து ₹60 ஆயிரம் மதிப்பிலான 5.5 பவுன் தங்க சங்கிலி, ₹1000 பணத்தை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து புக்கார ஆச்சாரி கொடுத்த புகாரின்பேரில், தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், நேற்று பெண்ணங்கூர் பஸ் ஸ்டாப்பில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து, போலீசார் விசாரித்தனர். அதில், அவர்கள் பெங்களூரு கனகபுரா பகுதியைச் சேர்ந்த அந்தோணி(27), ஆந்திர மாநிலம் அனந்தபூர் பாமுராய் கிராமத்தைச் சேர்ந்த அனில்குமார்(31) என்பதும், புக்கார ஆச்சாரியிடம் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : state police ,
× RELATED ஆந்திர மாநில போலீசாரின் உதவியுடன்...