×

பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து மாணவர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டம்

ஓசூர், மார்ச் 19:  பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து ஓசூரில் மாணவர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓசூர் ரயில் நிலையம் முன் அனைத்திந்திய இளைஞர் மற்றும் மாணவர் பெருமன்றத்தின் சார்ப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஐ மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான ராமச்சந்திரன் தலைமை வகித்தார். சிபிஐ மாநிலக்குழு உறுப்பினர் லகுமய்யா முன்னிலை வகித்தார். பொள்ளாச்சியில் இளம்பெண்களை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சமூக விரோத கும்பல் மீது  கடுமையான நடவடிக்கை எடுக்க கோரியும், உடந்தையாக  இருக்கும் அரசியல்வாதிகளை கைது செய்ய வலியுறுத்தியும், மூடி மறைக்க முயலும் மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும்  இந்த போராட்டம் நடைபெற்றது. இதில், மாதர் சங்க மாநில துணைத்தலைவர் சுந்தரவள்ளி, ஏஐடியுசி மாவட்ட செயலாளர் மாதையன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் பழனி அகியோர் கண்டன உரையாற்றினர். பெண்கள் மீதும், சிறுமிகள் மீதும் பாலியல் வன்கொடுமை தொடராமல் தடுக்க கடுமையான சட்டங்கள் கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

Tags : protest ,incident ,Pollachi ,
× RELATED பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரிப்பு