×

ஓசூரில் 100 சதவீத வாக்குப்பதிவுக்கு விழிப்புணர்வு பிரசாரம்

ஓசூர், மார்ச் 19:  ஓசூரில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தொழிற்சாலை ஊழியர்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் ஓசூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்னும் விழிப்புணர்வு பிரசாரம் மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரபாகர் அறிவுறுத்தலின் பேரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் ஓசூர் இடைத்தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பாகலூர் மற்றும் காலஸ்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலை ஊழியர்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது- குறிப்பாக, நடைபெற உள்ள தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது, கட்டாயம் வாக்களித்து நாட்டின் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

Tags : Hosur ,
× RELATED யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க...