×

அரூர் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கலுக்கு ஆர்டிஓ அலுவலகம் தயார்

அரூர், மார்ச் 19: தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் இன்று முதல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து அந்தந்த மாவட்டங்களில், இடைத்தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளில் கோட்டாட்சியர், தாலுகா அலுவலகங்களை தயார் செய்யும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். அரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில், சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம். இதற்கென தேர்தல் நடத்தும் அலுவலர் புண்ணியகோடி ஏற்பாடுகளை செய்து வருகிறார். வேட்பு மனுக்களை இன்று (19ம் தேதி) முதல் வரும் 26ம் தேதி வரை தாக்கல் செய்யலாம்.  அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யும் வழிமுறைகள், பின்பற்றவேண்டிய விதிமுறைகள் குறித்து அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.

Tags : office ,RTO ,Assam ,
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே...