சிவகிரி அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

சிவகிரி, மார்ச் 19:  சிவகிரி அருகே  மணல் கடத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். சிவகிரி எஸ்ஐ துரைசிங்கம்  தலைமையில் சிறப்பு எஸ்ஐ பழனிச்சாமி, வைரமுத்து, கருப்பசாமி உள்ளிட்ட போலீசார் சிவகிரி அடுத்த தேவிபட்டினம் பகுதியில் நேற்று அதிகாலை ரோந்து சென்றனர். அப்போது மேற்கே வழிவழிக்குளம் பகுதியில் அங்குள்ள மறுகால்  ஓடையில் இருந்து வந்த டிராக்டரை தடுத்துநிறுத்தி சோதனையிட்டதில் மணல் கடத்தி வரப்படுவது தெரியவந்தது. இதனிடையே போலீசாரை கண்டதும் டிராக்டரை ஓட்டிவந்த  விஸ்வநாதப்பேரி தர்மாபுரி பகுதியைச் சேர்ந்த மருதக்கிழவன் மகன் கஜேந்திரன் என்பவர்  டிராக்டரை விட்டுவிட்டு தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக  வழக்குப் பதிந்த போலீசார், டிராக்டரை பறிமுதல் செய்து தப்பியோடிய  கஜேந்திரனை தேடிவருகின்றனர்.

Related Stories: